ஈஸ்வரி நாகராஜனின் அடுத்த புத்தகமான 'ஜென் எருமை - Zen Buffalo' என்ற புத்தகம் அமேசான் தளத்தில் வெளிவந்திருக்கிறது. ஜென் குருமார்கள் தங்கள் சீடர்களுக்கு வழங்கிய சுவாரசியமான போதனைகளை ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் அழகாக விவரித்திருக்கிறார்.
இந்தக் காலத்து வாழ்க்கை முறை, ஊடகங்கள், உணவு ஆகியவை நம் உண்மையான இயல்பை மாற்றிவிட்டன. நிம்மதி என்பது வெளிப் பொருள்களில் தான் இருக்கிறது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மனம் போகும் போக்கில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மனம் என்பது என்ன என்பதை உணர்ந்தால் தானே அதை எதிர்கொள்ள முடியும். அதை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால்தானே நிம்மதி பிறக்கும்.
மனம் எனும் சூட்சுமத்தை அறிய ஜென் உதவுகிறது. ஐந்தாம் நூற்றாண்டில், அதாவது 1500 வருடங்களுக்கு முன்பு போதிதர்மர் என்ற ஒருவர் காஞ்சிபுரத்தில் பிறந்தார். சீனத்திற்கு சென்று அவர் பெற்ற ஞானத்தை அந்த மக்களுக்கு அளித்தார். அதுவே ஜென் ஆனது. அதை சான் என்றும் கூறுவர்.
யாரடா இந்த தாடிக்காரன். காட்டான் போல இருக்கிறான். எருமை மாட்டின் மீது சவாரி செய்கிறான். ஆனால் உண்மையை இப்படி போட்டு உடைக்கிறான், என்று அரண்டு போனார்கள் சீனர்கள். அந்த நாட்டு அரசனே போதிதர்மரின் ஞானத்தை கண்டு கதிகலங்கிப் போனான்.
போதிதர்மர் வளர்த்த இந்த ‘ஜென் எருமை’ அனைவருக்குள்ளும் ஒரு ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
ஈஸ்வரி நாகராஜன் எழுதிய
பிற புத்தகங்களை அமேசான் கிண்டிலில் கிடைக்கிறது.
Eswari Nagarajan என்ற இடுகையில் இவை உள்ளன.
1) மனக்கூண்டு - மனதை பற்றி எவரும் அறியாத உண்மைகள்
2) மனம்: அறியப்படாத ரகசியங்கள் (மனக்கூண்டு Book 2)
3) எண்ணங்கள் உருவாக்கிய மனிதன் (மனக்கூண்டு Book 3)
4) மனம் பொருள் ஏவல் (மனக்கூண்டு Book 4)
5) நாசூக்காக வாழ்வது எப்படி - இது பள்ளிக்கூடங்களில் கற்றுத்தராத வாழ்க்கைப் பாடம்.
6) நாசூக்காக வாழ்வது எப்படி? Book 2
7) ஜென் முட்டாள் - அர்த்தங்களின் மாயை
8) டுவிஸ்ட் குறுங்கதைகள்
9) மனம் - எண்ணங்களின் குவியல்
தொடர்புக்கு